search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கின்னஸ் சாதனை"

    • மதுரையை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் காதில் 18.1 செ.மீ. முடி வளர்த்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
    • மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த வஷேஸ்வர் தயாள் தியாகி என்பவரும் காதில் நீளமான முடி வளர்த்து கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பிடித்தார்.

    புதுச்சேரி:

    உலகில் பலரும் தங்களிடம் காணப்படும் தனி திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர்.

    அந்த வகையில் மதுரையை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் காதில் 18.1 செ.மீ. முடி வளர்த்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

    மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த வஷேஸ்வர் தயாள் தியாகி என்பவரும் காதில் நீளமான முடி வளர்த்து கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பிடித்தார்.

    அதேபோல் புதுவை காவல்துறை பயிற்சி பள்ளியில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் ரகுபதி காதில் நீளமாக முடி வளர்த்து கின்னஸ் சாதனைக்கு தயாராகி வருகிறார். இயற்கையாகவே காதில் வளரும் முடியை இவர் அவ்வப்போது குறைத்து வந்துள்ளார்.

    ஆனால் இதுபோன்ற சாதனை செய்திகளை கேட்ட பின்பு, தானும் அதே போல் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் கடந்த 2½ ஆண்டுகளாக காது முடிகளை வெட்டாமல் வளர்த்து வருகிறார்.

    இப்போது 7 செ.மீ. வரை காதில் முடி வளர்த்துள்ளார். விரைவில் இன்னும் ஒருசில ஆண்டுகளில் சாதனை படைக்கும் அளவுக்கு முடி வளர்ப்பேன் என்று அவர் கூறினார். இன்ஸ்பெக்டர் ரகுபதி காதில் முடி வளர்ப்பதற்கு புதுவை காவல்துறையில் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மார்க் ஓவன் எவன்ஸ்சி தனது மகளின் பெயரான லூசி என்பதனை 267 முறை பச்சை குத்தி கடந்த 2017-ம் ஆண்டு சாதனை படைத்திருந்தார்.
    • 2020-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த டீட்ரா விஜில் என்பவர் தனது பெயரை உடலில் 300 முறை பச்சை குத்தி மார்க் ஓவன் எவன்ஸ்சின் சாதனையை முறியடித்தார்.

    கின்னஸ் சாதனைக்காக பல்வேறு வகைகளிலும் தங்களது திறமைகளை நிரூபித்து சாதனை படைப்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் தனது மகளின் பெயரை உடலில் 667 முறை பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவரது பெயர் மார்க் ஓவன் எவன்ஸ். 49 வயதான இவர் ஏற்கனவே தனது மகளின் பெயரான லூசி என்பதனை 267 முறை பச்சை குத்தி கடந்த 2017-ம் ஆண்டு சாதனை படைத்திருந்தார்.

    இந்நிலையில் 2020-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த டீட்ரா விஜில் என்பவர் தனது பெயரை உடலில் 300 முறை பச்சை குத்தி மார்க் ஓவன் எவன்ஸ்சின் சாதனையை முறியடித்தார். இதைத்தொடர்ந்து எவன்ஸ் விஜிலின் சாதனையை முறியடித்து மீண்டும் சாதனை படைக்க திட்டமிட்டார்.

    அதன்படி கின்னஸ் சாதனை அமைப்புக்கு தகவல் தெரிவித்து, அதன் அடிப்படையில் 2 டாட்டூ கலைஞர்கள் மூலம் தனது உடலின் முழுப்பகுதியிலும் மகளின் பெயரை 667 முறை பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த சாதனையை எனது மகளுக்கு அர்ப்பணிக்கிறேன் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகில் மிகவும் வயதான நபர் பட்டியலில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 116 வயதான மூதாட்டியான மரியா பிரான்யாஸ் இடம் பெற்றிருந்தார்.
    • 5 தலைமுறைகளை கண்டுள்ள குஞ்சீரும்மாவுக்கு தற்போது வரை கண் பார்வை மற்றும் கேட்கும் திறன் நன்றாக இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்தவர் குஞ்சீரும்மா. 120 வயது மூதாட்டியான இவர், உலகிலேயே மிகவும் வயதானவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

    உலகில் மிகவும் வயதான நபர் பட்டியலில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 116 வயதான மூதாட்டியான மரியா பிரான்யாஸ் இடம் பெற்றிருந்தார். அவரை பின்னுக்கு தள்ளி கேரள மூதாட்டி குஞ்சீரும்மா உலகில் அதிக வயதானவர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

    குஞ்சீரும்மா பள்ளிக்கு செல்லவில்லை. அவருக்கு 17 வயதிலேயே திருமணம் ஆகி உள்ளது. கலம்பன் செய்தலி என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். அவர்களுக்கு மொத்தம் 13 குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களில் 7 பேர் இறந்து விட்டனர்.

    5 தலைமுறைகளை கண்டுள்ள குஞ்சீரும்மாவுக்கு தற்போது வரை கண் பார்வை மற்றும் கேட்கும் திறன் நன்றாக இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படாமல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பஞ்சாப்பை சேர்ந்த குவார் அம்ரித்பீர்சிங் என்ற வாலிபர் புஷ்-அப் செய்வதில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
    • சாதனைக்காக ஜிம்முக்கு சென்றதில்லை. சத்தான உணவு வகைகளையும் எடுத்ததில்லை.

    சமீப காலமாக சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் பல்வேறு வகைகளில் தங்களது திறமைகளை நிரூபித்து கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் பஞ்சாப்பை சேர்ந்த குவார் அம்ரித்பீர்சிங் என்ற வாலிபர் புஷ்-அப் செய்வதில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

    குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள உமர்வாலா என்ற கிராமத்தை சேர்ந்த 21 வயதான குவார் அம்ரித்பீர்சிங் தனது முதுகில் 20 பவுண்ட் எடை கொண்ட பேக்கை சுமந்து கொண்டு ஒரு நிமிடத்தில் விரல் நுனியில் 86 புஷ்-அப்களை செய்து இந்த சாதனையை படைத்துள்ளார். இவரது சாதனை முயற்சியின் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.

    அதனை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து குவார் அம்ரித்பீர்சிங் கூறுகையில், நான் இந்த சாதனைக்காக ஜிம்முக்கு சென்றதில்லை. சத்தான உணவு வகைகளையும் எடுத்ததில்லை. வழக்கமான உடற்பயிற்சி முறைகளை பின்பற்றினேன் என்றார்.

    • ஒரு நிமிடத்தில் 9 முறை ஸ்கிப்பிங் செய்து கிட்கேட் பூனை இந்த சாதனையை படைத்துள்ளது.
    • பூனையின் வயது காரணமாக நாங்கள் குதிப்பதை குறைந்த எண்ணிக்கையில் வைத்திருந்தோம் என்றார்.

    மனிதர்கள் மட்டுமல்ல விலங்கினங்களும் கூட கின்னஸ் சாதனை படைத்து வருகின்றன. அமெரிக்காவில் உள்ள மிசூரி பகுதியை சேர்ந்த கிட்கேட் என்ற 13 வயது பூனை அதன் உரிமையாளர் திரிஷா சீப்ரிட் உதவியுடன் ஒரு நிமிடத்தில் அதிக முறை ஸ்கிப் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

    பூனை அதன் உரிமையாளருடன் சேர்ந்து ஜம்ப் ரோப்பிங் திறமையை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், ஒரு நிமிடத்தில் 9 முறை ஸ்கிப்பிங் செய்து கிட்கேட் பூனை இந்த சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனை குறித்து பூனையின் உரிமையாளரான திரிஷா சீப்ரிட் கூறுகையில், ஜம்ப் ரோப்பிங் செய்வது எனக்கும், எனது பூனைக்கும் பிடித்து வருகிறது. மேலும் பூனையின் வயது காரணமாக நாங்கள் குதிப்பதை குறைந்த எண்ணிக்கையில் வைத்திருந்தோம் என்றார்.

    • எரின் ஹனிகட் என்ற 38 வயதான பெண் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
    • பலமுறை அகற்றியும் தாடி வளர்ந்ததால் ஒரு கட்டத்தில் அவர் தாடியை அகற்றுவதை நிறுத்தி விட்டார்.

    ஆண்கள் தாடி வளர்ப்பது பொதுவானது. அதே நேரம் பெண்கள் முகத்தில் மீசை வளர்ந்தால் சங்கடப்படுவார்கள். ஆனால் மீக நீளமான தாடிக்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளார் அமெரிக்க பெண் ஒருவர். எரின் ஹனிகட் என்ற 38 வயதான அந்த பெண் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவருக்கு ஒழுங்கற்ற மாதவிடாய், எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளும் வந்துள்ளது. இதற்காக சிகிச்சைகள் பெற்ற நிலையிலும் தொடர்ந்து அவரது முகத்தில் தாடி வளர ஆரம்பித்தது. பலமுறை அகற்றியும் தாடி வளர்ந்ததால் ஒரு கட்டத்தில் அவர் தாடியை அகற்றுவதை நிறுத்தி விட்டார்.

    அதோடு அதனையே சாதனையாக மாற்றுவதற்கும் முடிவு செய்த அவருக்கு சுமார் 30 சென்டி மீட்டர் அதாவது 11.8 அங்குலம் தாடி வளர்ந்தது. இதன் மூலம் ஒரு பெண்ணால் இவ்வளவு நீளமான தாடி வளர்த்து கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்தார்.

    அவருக்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த 75 வயது பெண் விவியன் வீலர் இந்த சாதனையை படைத்திருந்தார். அவருக்கு 25.5 சென்டி மீட்டர் தாடி இருந்தது. இந்த சாதனை குறித்து பேசிய எரின் ஹனிகட் கின்னஸ் சாதனையில் இடம்பெறுவேன் என்று நினைக்கவில்லை என தெரிவித்தார்.

    • ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நாய் 29 ஆண்டுகள் மற்றும் 150 நாட்கள் வாழ்ந்தது தான் உலகின் மிக அதிக வயது கொண்ட நாய் என்ற சாதனையை படைத்திருந்தது.
    • நாய் வயது முதிர்வு காரணமாக பார்வை குறைபாடு மற்றும் நடப்பதற்கு சிரமப்பட்டாலும், ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    பொதுவாகவே நாய்களின் ஆயுட்காலம் 10 முதல் 15 வயது வரை தான். ஆனால் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பாபி என்ற பெயரிடப்பட்ட நாய் ஒன்று 30 வருடங்கள் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

    இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நாய் 29 ஆண்டுகள் மற்றும் 150 நாட்கள் வாழ்ந்தது தான் உலகின் மிக அதிக வயது கொண்ட நாய் என்ற சாதனையை படைத்திருந்தது.

    அந்த சாதனையை பாபி முறியடித்துள்ளது. இந்த நாய் வயது முதிர்வு காரணமாக பார்வை குறைபாடு மற்றும் நடப்பதற்கு சிரமப்பட்டாலும், ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    • மாரத்தான் போட்டிகள் 42 கி.மீ, 21 கி.மீ, 10 கி.மீ, 5 கிலோ மீட்டர் என 4 பிரிவுகளில் நடத்தப்பட்டது.
    • 5 கிலோ மீட்டர் தூரத்துக்கான போட்டியில் 64 ஆயிரத்து 714 பேர் பங்கேற்று ஓடினார்கள்.

    சென்னை:

    சென்னையில் இன்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி கின்னஸ் சாதனை படைத்தது.

    சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் ஆண்டு தோறும் கலைஞர் நினைவு மாரத்தான் போட்டியை நடத்தி வருகிறார்.

    இந்த ஆண்டு கலைஞர் நூற்றாண்டையொட்டி கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் பெயர் பதிவை 3 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பெயர் பதிவு கடந்த மாதம் 20-ந்தேதியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 73 ஆயிரத்து 206 பேர் பதிவு செய்தனர்.

    இந்த மாரத்தான் போட்டிகள் 42 கி.மீ, 21 கி.மீ, 10 கி.மீ, 5 கிலோ மீட்டர் என 4 பிரிவுகளில் நடத்தப்பட்டது.

    இன்று அதிகாலை 4.30 மணிக்கு 42 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டி தொடங்கியது. மெரீனா கடற்கரை கலைஞர் நினைவிடம் அருகே இந்த போட்டியை அமைச்சர் கே.என்.நேரு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் 671 பேர் கலந்துகொண்டு ஓடினார்கள். கலைஞர் நினைவிடத்தில் இருந்து காமராஜர் சாலை, பட்டினப்பாக்கம் உட்புற சாலை, எம்.ஆர்.சி. நகர், சத்யா ஸ்டுடியோ, முத்து லெட்சுமி பார்க், பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச், பெசன்ட் நகர் சர்ச் அங்கிருந்து பழைய மகாபலிபுரம் சாலை வழியாக அப்பல்லோ வரை சென்று எம்.ஜி.ஆர். சாலை யில் 'யூடர்ன்' செய்து அதே வழியில் திரும்பி வந்து தீவுத் திடலில் முடித்தார்கள்.

    காலை 5.30 மணிக்கு 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    21 கிலோ மீட்டர் தூர போட்டியில் 1991 பேர் பங்கேற்று ஓடினார்கள். இவர்கள் கலைஞர் நினைவிடத்தில் இருந்து காமராஜர் சாலை, பட்டினபாக்கம் உட்புற சாலை, எம்.ஆர்.சி. நகர் வழியாக சத்யா ஸ்டுடியோ சென்று 'யூ டர்ன்' செய்து அதே வழியாக திரும்பி வந்து தீவுத் திடலில் ஓடி முடித்தார்கள்.

    10 கிலோ மீட்டர் போட்டியில் 6 ஆயிரத்து 240 பேர் பங்கேற்று ஓடினார்கள். இவர்கள் கலைஞர் நினைவிடத்தில் தொடங்கி காமராஜர் சாலை வழியாக கலங்கரை விளக்கம் வரை சென்று திரும்பி வாலாஜா சாலை, நேப்பியர் பாலம் வழியாக ஓடி தீவுத்திடலில் முடித்தார்கள்.

    5 கிலோ மீட்டர் தூரத்துக்கான போட்டியில் 64 ஆயிரத்து 714 பேர் பங்கேற்று ஓடினார்கள். இவர்களில் ஆண்கள் 50 ஆயிரத்து 629 பேர். பெண்கள் 21 ஆயிரத்து 514 பேரும் கலந்து கொண்டனர். திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் 1063 பேர் பங்கேற்றார்கள்.

    இந்த போட்டியில் பங்கேற்றவர்கள் கலைஞர் நினைவிடத்தில் தொடங்கி வாலாஜா சாலை, சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் வழியாக ஓடி தீவுத்திடலில் நிறைவு செய்தார்கள்.

    மாரத்தான் ஓட்டம் நடைபெற்ற வழி நெடுகிலும் விழாக்கோலம் பூண்டு இருந்தது. போட்டியாளர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்த 14 இடங்களில் இசை கச்சேரிகள் களை கட்டியது.

    திருவண்ணாமலை பெரிய மேளம், அலங்கா நல்லூர் சமர்ப்பறையாட்டம், ராமநாதபுரம் சிம்லா மேளம், காரியாபட்டி நையாண்டி மேளம், பள்ளிப்பட்டி ஆதிமேளம், கருப்பணம்பட்டி உருமி மேளம், ஈரோடு பம்பை மேளம், அந்தியூர் கட்ட மேளம், வாடிப்பட்டி தப்பாட்டம், கோவை துடும்பாட்டம், சங்ககிரி பெருமுரசு, திருப்பூர் சமமாப், சேலம் பெரும்முரசு, தப்பட்டை, திண்டிவனம் நையாண்டி மேளம் ஆகிய 14 குழுவினரும் 14 இடங்களிலும் பாரம்பரிய இசையை இசைத்தார்கள்.

    ஓடியவர்கள் மட்டுமல்லாமல் இந்த இசை கச்சேரிகளை பார்க்கவும் ஒவ்வொரு இடத்திலும் பொதுமக்கள் பெருமளவு திரண்டு இருந்தார்கள்.

    வழியில் 17 இடங்களில் வீரர்கள் களைப்பை போக்க உற்சாக பானங்கள் வழங்கப்பட்டன. இதில் தர்பூசணி, பழச்சாறுகள், குளிர்பானங்கள், கடலை மிட்டாய், தண்ணீர், பிஸ்கட், வாழைப் பழங்கள் என பல வகைகள் வழங்கப்பட்டன. இதற்காக தர்பூசணி மட்டும் 5 டன்கள் கொண்டு குவிக்கப்பட்டிருந்தது.

    போட்டிகள் நிறைவடைந்த இடமான தீவுத்திடல் திருவிழாப்போல் களைக்கட்டியது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் அமர பிரமாண்ட மேடை அமைக்கப் பட்டிருந்தது.

    இன்னொரு பக்கம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் அமர தனிமேடை அமைக்கப்பட்டிருந்தது.

    இசைக்குழுவுக்காக தனி மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் செந்தில்-ராஜலெட்சுமி குழுவினரின் கிராமிய இசை கச்சேரிகள் களைகட்டியது. அதை கேட்டு கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர்.

    நிகழ்ச்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா ஆகிய 8 நாடுகளின் தூதுவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள்.

    உலக அளவில் மாரத்தான் போட்டியில் அதிக எண்ணிக்கையில் வீரர்கள் ஓடியதும் இந்த போட்டியில்தான். அதேபோல் திருநங்கைகளும், திருநம்பிகளும் அதிக அளவில் கலந்து கொண்டதும் இந்த போட்டியில்தான்.

    இதை பார்வையிட்ட கின்னஸ் குழுவினர் கின்னஸ் சாதனையாக அங்கீகரித்து அதற்கான சான்றிதழை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்கள்.

    பரிசு பெற்றவர்கள் விபரம் வருமாறு:-

    42 கிமீ ஆண்கள் பிரிவு:

    முதல் பரிசு ரூ.1லட்சம் சவான்பர்வால், 2-வது பரிசு ரூ.50 ஆயிரம் அபிசேக் சோனி, 3-வது பரிசு ரூ.25 ஆயிரம் ஆனந்த்கான் கோர்.

    42 கிமீ பெண்கள் பிரிவு:

    முதல் பரிசு ஜோதி சங்கர் ராவ் (ரூ.1லட்சம்), 2-வது பரிசு-அஸ்வினி மதன் ஜாதவ் (ரூ.50 ஆயிரம்), 3-வது பரிசு-ஆஷா (ரூ.25 ஆயிரம்).

    21 கிமீ ஆண்கள் பிரிவு:

    முதல் பரிசு: லெட்சுமணன் (ரூ.1லட்சம்), 2-ம் பரிசு: ரஞ்சித்குமார் பட்டேல் (ரூ.50 ஆயிரம்), 3-ம் பரிசு: தர்மேந்தர் புனியா (ரூ.25 ஆயிரம்).

    12 கிமீ பெண்கள் பிரிவு:

    முதல் பரிசு: லெஸ்லி டெஹ்னி (ரூ.1 லட்சம்), 2-ம் பரிசு: பவதாரணி (ரூ.50 ஆயிரம்), 3-ம் பரிசு: நிஷூ (ரூ.25ஆயிரம்).

    10 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவு

    முதல் பரிசு: மோகன் செய்னி (ரூ.50 ஆயிரம்), 2-ம் பரிசு: வினீஸ்குமார் (ரூ.25 ஆயிரம்), 3-ம் பரிசு: நிகில் குமார் (ரூ.15 ஆயிரம்)

    10 கிலோ மீட்டர் (பெண்கள் பிரிவு)

    முதல் பரிசு: பார்த்தி (ரூ.50 ஆயிரம்), 2-ம் பரிசு: பிரீனு யாதவ் (ரூ.25 ஆயிரம்)

    5 கிமீ ஆண்கள் பிரிவு:

    முதல் பரிசு: ராமேஸ்வர் முஞ்சல் (ரூ.25 ஆயிரம்), 2-ம் பரிசு: அமன் சவுத்ரி (ரூ.15 ஆயிரம்), 3-ம் பரிசு: ஹரிஓம் திவாரி (ரூ.10 ஆயிரம்).

    5 கிமீ பெண்கள் பிரிவு

    முதல் பரிசு: சவுமியா செல்வன் (ரூ.25 ஆயிரம்), 2-ம் பரிசு: சம்யா ஸ்ரீ (ரூ.15 ஆயிரம்), 3-ம் பரிசு: திவ்யா (ரூ.10 ஆயிரம்).

    • இது இது சாதாரண மாரத்தான் அல்ல, சமூக நீதி மாரத்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    • பதிவு கட்டணம் ரூ.3.42 கோடி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு வழங்கப்பட்டது.

    சென்னை:

    கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு உலக சாதனை முயற்சியாக சென்னையில் இன்று சர்வதேச மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. 42 கிலோ மீட்டர், 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் என நான்கு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா தீவுத்திடலில் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார்.

    அப்போது, உலகிலேயே முதல் முறையாக திருநங்கைகள், திருநம்பிகள் 1,063 பேர் மாரத்தானில் பங்கேற்றுள்ளனர் என்றும், மாரத்தானில் பங்கேற்ற திருநங்கைகளுக்கு ₨1000 ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகவும் கூறினார். மாரத்தான் ஓட்டத்திற்கு முன்பதிவு கட்டணமாக ₨3.42 கோடி வசூலானது என்று கூறிய அவர், இது இது சாதாரண மாரத்தான் அல்ல, சமூக நீதி மாரத்தான் என்றார்.

    இந்த மாரத்தான் போட்டியில் 73206 நபர்கள் கலந்துகொண்டனர். இதன்மூலம் கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. கின்னஸ் உலக சாதனை சான்றிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உலக சாதனை குழுவினர் வழங்கினர்.

    மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டவர்கள் பதிவு கட்டணமாக செலுத்திய 3 கோடியே 42 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு வழங்கும் வகையில், காசோலையை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் கூடுதல் செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    • மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆதித்யா பச்சோலி என்பவர் 14.12 வினாடிகளில் தலைப்பாகையை ஒருவர் மீது விரைவாக கட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
    • நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒருவருக்கு ஆரஞ்சு நிற வடிவிலான தலைப்பாகையை ஆதித்யா பச்சோலி நேர்த்தியாக கட்டுவது போன்ற காட்சிகள் இருந்தது.

    தலைப்பாகை அணிவது வட இந்தியாவில் பாரம்பரிய பழக்கத்தில் ஒன்று. குறிப்பாக திருமண விழாக்கள் மற்றும் சில நிகழ்ச்சிகளின் போது தலைப்பாகை கட்டுவதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆதித்யா பச்சோலி என்பவர் 14.12 வினாடிகளில் தலைப்பாகையை ஒருவர் மீது விரைவாக கட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அதில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒருவருக்கு ஆரஞ்சு நிற வடிவிலான தலைப்பாகையை ஆதித்யா பச்சோலி நேர்த்தியாக கட்டுவது போன்ற காட்சிகள் இருந்தது.

    இந்த வீடியோ ஆயிரகணக்கான பார்வைகளை பெற்ற நிலையில் பல்வேறு விமர்சனங்களையும் பெற்றுள்ளது. ஒரு பயனர் தனது பதிவில், கின்னஸ் உலக சாதனை அதன் மதிப்பை இழந்து விட்டது. சமீபகாலமாக அவர்கள் எதையும் அங்கீகரிக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர் இந்த சாதனையை என்னால் முறியடிக்க முடியும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

    • 2 குழந்தைகளின் தாயான எலிசபெத், ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஊட்டமளித்துள்ளார்.
    • எலிசபெத் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளின் உயிரை காப்பாற்ற உதவுகிறார்.

    அமெரிக்காவின் ஓரிகான் பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் ஆண்டர்சன் சியாரா. தாய்ப்பால் தெய்வம் என்று அழைக்கப்படும் எலிசபெத்துக்கு ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் என்ற நோய்க்குறியின் காரணமாக அவரது உடல், நாளொன்றுக்கு சுமார் 6.65 லிட்டர் தாய்ப்பாலை உற்பத்தி செய்கிறது. இது சராசரி தாய்க்கு சுரக்கும் தாய்ப்பால் சுரப்பை விட கிட்டத்தட்ட 8 முதல் 10 மடங்கு அதிகமாகும்.

    2014-ம் ஆண்டில், ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் நோய் இருப்பது கண்டறியப்பட்டபோது, அவரது மார்பகத்தில் இருந்து, யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவு தாய்ப்பால் சுரப்பு இருந்தது. அந்த நிலையில், தாய்ப்பால் வீணாகப் போவதை விரும்பாத எலிசபெத், பிற தாய்மார்களுக்கு உதவ முடிவு செய்தார். அதன்பிறகு அவர் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு தோராயமாக 250 குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தானமாக கொடுத்தார்.

    2 குழந்தைகளின் தாயான இவர் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஊட்டமளித்துள்ளார். குறிப்பாக குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றவும் உதவுகிறார்.

    கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந் தேதி முதல் 2018-ம் ஆண்டு ஜூன் 20-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1,599.68 லிட்டர் ஒரு பால் வங்கிக்கு நன்கொடையாக அளித்ததன் மூலம், எலிசபெத் ஆண்டர்சன் சியாரா கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

    உண்மையில், இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை என்கிறார் அவர்.

    • ரஸ்ஸல் ஸ்டோவர் மொத்தம் 205 ராட்சத சாக்லேட் துண்டுகளைப் பயன்படுத்தினார்.
    • சாக்லேட் பெட்டிக்குள் கேரமல், தேங்காய் கொத்து, பழம் மற்றும் நட்ஸ் கேரமல் என 9 வகை சாக்லெட்டுகள் இடம்பெற்றுள்ளன.

    அமெரிக்காவில் ரஸ்ஸல் ஸ்டோவர் என்கிற பிராண்ட் நிறுவனம் ஒன்று 2500 கிலோவுக்கு மேல் எடை கொண்ட உலகின் மிகப்பெரிய சாக்கெட் பெட்டியை தயாரித்துள்ளது,

    இந்த அற்புதமான சாக்லேட் படைப்பு ஒவ்வொன்றும் வாய் ஊறும் ஒன்பது வகை சாக்லேட் சுவைகளால் தயாரிக்கப்பட்டுள்ளது.

    சாக்லேட் பிரியர்களின் கற்பனையாக இருக்கக்கூடிய ஒரு பொருளை சாக்லேட் தயாரிப்பாளர் ஒருவர் உலக சாதனையாக படைத்துள்ளார்.

    கின்னஸ் உலக சாதனைபடி, 2,547.50 கிலோ எடையுள்ள பிரமாண்டமான சாக்லேட் நிரப்பப்பட்ட பெட்டியுடன், ரஸ்ஸல் ஸ்டோவர் (அமெரிக்கா) என்ற நிறுவனம் சாதனையை முறியடித்தது.

    ஒப்பிடுகையில், இது வயதான கருப்பு காண்டாமிருகத்தின் எடையைப் போன்றது. விலங்குகள் பொதுவாக 1,400 மற்றும் 2,800 கிலோ (3,086 மற்றும் 6,173 பவுண்டுகள்) எடையுள்ளதாக இருக்கும்.

    சாக்லேட் நிரப்பப்பட்ட பெட்டியானது 9.27 மீ x 4.69 மீ x 0.47 மீ (30.43 அடி x 15.41 அடி x 1.55 அடி) அளவிடப்பட்டதாகவும், கடந்த ஏப்ரல் 17ம் தேதி அமெரிக்காவின் மிசோரி, கன்சாஸ் நகரில் இது காட்சிபடுத்தப்பட்டதாகவும் உலக சாதனை பராமரிப்பு அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.

    இந்த சாக்லேட் பெட்டிக்குள் கேரமல், தேங்காய் கொத்து, பழம் மற்றும் நட்ஸ் கேரமல், வேர்க்கடலை கொத்து, பெக்கன் டிலைட், ராஸ்பெர்ரி கிரீம், ஸ்ட்ராபெரி கிரீம், டோஃபி மற்றும் ட்ரஃபுல், அத்துடன் சாக்லேட்-மூடப்பட்ட பாதாம் ஆகியவற்றின் பெரும் பகுதியும் ஒன்பது வெவ்வேறு சாக்லேட் சுவைகளால் நிரப்பப்பட்டது.

    சாதனையை முறியடிக்கத் தேவையான குறைந்தபட்ச எடையை அடைய, ரஸ்ஸல் ஸ்டோவர் மொத்தம் 205 ராட்சத சாக்லேட் துண்டுகளைப் பயன்படுத்தினார். அவை ரஸ்ஸல் ஸ்டோவர்யின் ஆலைகளில் வடிவமைக்கப்பட்டன.

    மேலும் இந்த முயற்சியின் போது ஒவ்வொரு சாக்லேட் துண்டும் எடைபோடப்பட்டது. மேலும், சிறிய துண்டுகள் சுமார் 4.53 கிலோ எடை கொண்டது. அதே வேளையில், சில பெரிய சாக்லேட்கள் 16 கிலோவிற்கும் (35 பவுண்டுகள்) எட்டின.

    ×